search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்வரி ராவ்"

    நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu
    வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.

    தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா - வைபவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

    சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #VenkatPrabhu

    ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் தனது சினிமா வாழ்க்கை பற்றி கூறியிருக்கிறார். #EaswariRao
    ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்ததன் மூலம் அடுத்த சுற்றில் நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தமிழ்மொழி, டான்ஸ், நடிப்பு என்று எதுவும் தெரியாமல், 17 வயதில் ‘கவிதைபாடும் அலைகள்’ படத்தில் அறிமுகம் ஆனேன்.

    கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஆனால் என் கறுப்பு நிறமும் ஒல்லியான உடலமைப்பும் அதற்கு பெரிய தடையாக இருந்தன. நிறப்பாகுபாட்டால் ரொம்ப வருத்தப்பட்டேன். கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆசைப்பட்டபடி என் சினிமா வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை ஏற்பட்டது. பிறகு சீரியலுக்கு வந்ததுடன், ‘சரவணா’ உள்பட சில படங்களில் நடித்தேன். 2006 -ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.



    ‘காலா’ படம் தொடர்பாக ரஞ்சித், 2 மாதமாக என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். 3வது மாதம்தான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிப்பது உறுதியாச்சு. என்னை அறிமுகப்படுத்திய பாலு மகேந்திராவுக்கு அர்ப்பணிப்பு பண்ற மாதிரியும், பெண்களை உயர்வா சித்திரிக்கும் வகையிலும் உருவாகிவரும் படம்தான் ‘அழியாத கோலங்கள்’. இந்த படத்தை தயாரிப்பதுடன், படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறேன்’ என்று கூறினார்.

    விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் ‘வர்மா’ படத்தில் ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்த நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஈஸ்வரி ராவ். ரஜினியுடன் நடிக்க இளம் நடிகைகள் எல்லாம் போட்டி போட ஈஸ்வரி ராவை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

    காலா படம் வெளியாவதற்கு முன்பே இன்னொரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கவும் தொடங்கி விட்டார். பாலா இயக்க விக்ரம் மகன் அறிமுகமாகும் வர்மா படத்தில் ஈஸ்வரி ராவ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இதை படக்குழு ரகசியமாக வைத்து இருக்கிறது.



    வர்மா படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தழுவல். அந்த படத்தில் ஒரு வேலைக்காரி வேடம் இருக்கும். அந்த வேடத்தையே பெரிய கதாபாத்திரமாக்கி அதில் நடிக்க வைத்துள்ளார் பாலா.
    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ரஜினியுடன் நடித்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகை ஈஸ்வரி ராவ் கூறியிருக்கிறார். #Kaala
    ரஜினிக்கு ஜோடியாக காலா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார் ஈஸ்வரிராவ். காலா படம் பற்றி ஈஸ்வரி ராவ் கூறும்போது ‘இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

    ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் காத்துக்கொண்டிருக்க எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ரஞ்சித் அழைத்து தேர்வு வைத்தார். ஆனால் ரஜினி படம் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருந்தார். என்னுடைய காட்சிகள் பெரும்பாலும் தாராவியில் படமாக்கப்பட்டன.

    படத்தில் நான் நிறைய நகை அணிந்து இருப்பேன். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. காலா படத்திற்கு பிறகும் இதுவரை எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.
    ×